search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து உலகக்கோப்பை"

    மே 30-ந்தேதி தொடங்கும் உலகக்கோப்பையை இந்தியா வெல்லாவிடில், நான் மிகவும் ஏமாற்றம் அடைவேன் என்று முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் வருகிற 30-ந்தேதி தொடங்கும் உலகக்கோப்பை தொடர் ‘ரவுண்ட் ராபின்’ முறையில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்ல அதிகமான வாய்ப்பு உள்ளதாக முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அசாருதீன் கூறுகையில் ‘‘நாம் உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. நாம் சிறந்த அணியை தேர்வு செய்துள்ளோம். ஆடுகளங்கள் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், நாம் கஷ்டப்படுவோம் என்று எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.



    ஆனால், நம்முடைய பந்து வீச்சாளர்கள் கூட எதிரணியை எளிதில் அவுட்டாக்கி விடுவார்கள். நம்மிடம் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்தியா சிறந்த அணி. உலகக்கோப்பையை இந்தியா வெல்லவில்லை என்றால், நான் மிகவும் ஏமாற்றம் அடைவேன்’’ என்றார்.
    தோள்பட்டை காயத்தில் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டுள்ளார். #ICCWorldCup #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் கடந்த மாதம் 23-ந்தேதிக்குள் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.

    15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜை ரிச்சர்ட்சன் இடம்பிடித்திருந்தார். தற்போது தோள்பட்டை காயத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவருக்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.



    ஒவ்வொரு அணிகளும் இந்த மாதம் 23-ந்தேதிக்குள் தங்களது 15 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை உறுதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு ஐசிசி-யின் ஒப்புதலுக்குப் பிறகே வீரர்களை மாற்ற முடியும்.
    உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்திருந்த அன்ரிச் நோர்ட்ஜ் காயத்தால் விலகியதால், கிறிஸ் மோரிஸ் இடம்பிடித்துள்ளார். #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் கடந்த 23-ந்தேதிக்குள் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.

    தென்ஆப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜ் இடம் பிடித்திருந்தார். இலங்கைக்கு எதிரான தொடரின்போது இவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன் காயம் சரியாகிவிடும் என்று நினைத்த தென்ஆப்பிரிக்கா, அவரது பெயரை 15 பேர் கொண்ட பட்டியலில் சேர்த்தது.

    இந்நிலையில் அன்ரிச் நோர்ட்ஜ்-யின் காயம் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு குணமடையவில்லை. இதனால் கிறிஸ் மோரிஸ் உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ளார். கிறிஸ் மோரிஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.



    டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசும் திறமைப் படைத்த கிறிஸ் மோரிஸ் சிறப்பாக பேட்டிங்கும் செய்வார். உலகக்கோப்பைக்கான 10 அணிகளும் இந்த மாதம் 23-ந்தேதிக்குள் தங்களது 15 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை உறுதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
    உலகக்கோப்பைக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் நான்கு வருடமாக ஒருநாள் போட்டியில் விளையாடாத கருணாரத்னே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணிகளும் 15 பேர் கொண்ட தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

    இன்று மதியம் இலங்கை அணி 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்காமல் இருந்த கருணாரத்னே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இலங்கை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கருணாரத்னே, 2. அவிஷ்கா பெர்னாண்டோ, 3. திரிமன்னே, 4. குசால் பெரேரா, 5. குசால் மெண்டிஸ், 6. மேத்யூஸ், 7. டி சில்வா, 8. வாண்டர்சே, 9. திசாரா பேரேரா, 10. உடானா, 11. லசித் மலிங்கா, 12. லக்மல், 13. நுவான் பிரதீப், 14. ஜீவன் மெண்டிஸ், 15. ஸ்ரீவர்தனா.
    மே மாதம் 30-ந்தேதி தொடங்கும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜாப்ரா ஆர்சர்-க்கு இடமில்லை. #WorldCup2019
    இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை மாதம் 14-ந்தேதி வரை 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

    ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய வீரர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி 15 பேர் கொண்ட வீரர்களின் தொடக்க பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜாப்ரா ஆர்சர் பெயர் இடம் பெறவில்லை. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.

    உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் பட்டியல்:-

    1. மோகன் (கேப்டன்), 2. பேர்ஸ்டோவ், 3. ஜேசன் ராய், 4. ஜோ ரூட், 5. பென் ஸ்டோக்ஸ், 6. ஜோஸ் பட்லர், 7. மொயீன் அலி, 8. கிறிஸ் வோக்ஸ், 9. லியாம் பிளங்கெட், 10. அடில் ரஷித், 11. மார்க் வுட், 12. அலேக்ஸ் ஹேல்ஸ், 13. டாம் குர்ரான், 14. ஜோ டென்லி, 15. டேவிட் வில்லே.
    இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கான வங்காளதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #WorldCup2019
    10 அணிகள் பங்கேற்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. வரும் 23-ந்தேதிக்குள் அனைத்து அணிகளும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்திருந்தது.

    ஒவ்வொரு அணிகளும் தங்களது வீரர்கள் பட்டியலை அறிவித்து வருகிறது. இந்நிலையில் வங்காள தேச அணி இன்று 15 பேர் கொண்ட பட்டியலை அறிவித்துள்ளது. மோர்தசா கேப்டனாகவும், ஷாகிப் அல் ஹசன் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வங்காள தேச அணி விவரம்:-

    1. மோர்தசா, 2. தமிம் இக்பால், 3. லிட்டோன் தாஸ், 4. சவுமியா சர்கார், 5. முஷ்பிகுர், 6. மெஹ்முதுல்லா, 7. ஷாகிப் அல் ஹசன், 8. மிதுன், 9. சபீர் ரஹ்மான், 10. மொசாடெக், 11. சாய்புதீன், 12. மெஹிதி, 13. ருபேல் ஹொசைன், 14. முஷ்டாபிஜூர் ரஹ்மான், 15. அபு ஜயேத்.
    பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உலகக்கோப்பையை வெல்ல முடியாது என வாசிம் அக்ரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை விளாசி உள்ளார்.
    உலகக்கோப்பை போட்டித் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு நாட்டு அணியும் வீரர்களை தயார் செய்து வருகின்றன. இன்னும் இரு மாதங்கள் இருக்கும் நிலையில், வீரர்களின் உடற்தகுதிக்கு ஒவ்வொரு அணியும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

    ஆனால், பாகிஸ்தான் அணியின் நிலைமை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக 50 ஓவர்கள் போட்டியில் கடந்த 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்குப்பின் அந்த அணியால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை.

    நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியக்கோப்பை என அனைத்திலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. சமீபத்தில் துபாயில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-5 என்ற கணக்கில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது.

    துபாயில் பாகிஸ்தானுக்கு சாதகமான சூழல் இருந்தபோதிலும் கூட அந்த அணி வீரர்களின் மோசமான செயல்பாட்டால் கோப்பையை வெல்ல முடியாமல் போனது. பாகிஸ்தான் அணியில் 6 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டாலும், பாகிஸ்தான் அணியில் இருந்த இளம் வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை.

    இந்நிலையில், முன்னாள் இடது கை வேகபந்து வீச்சாளரும், கேப்டனுமான வாசிம் அக்ரம் அந்நாட்டு எழுத்தாளர் சாத் சஜிக்குக்கு அளித்த பேட்டியில் வீரர்களின் உடல்தகுதியை விளாசியுள்ளர். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் வீரர்களுக்கு இன்னும் பிரியாணி சப்ளை செய்யப்பட்டு வருகிறது. வீரர்கள் அனைவரும் ருசியாக பிரியாணி சாப்பிட்டால், சாம்பியன்களுடன் போட்டியிட முடியாது. வெற்றி பெறவும் முடியாது.

    இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.

    உலகக்கோப்பைப் போட்டிக்கான அணியை பாகிஸ்தான் வரும் 18-ம் தேதி அறிவிக்கிறது. இந்திய அணி வரும் 15-ம் தேதி அறிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உலகக்கோப்பைக்கான புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் விற்பனையாகிறது. #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணிகளும் உலகக்கோப்பைக்கு புதிய ஜெர்ஸியுடன் களம் இறங்கும். அந்த வகையில் இந்திய அணிக்கான ஜெர்ஸி ஏற்கனவே வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அந்த அணிக்கான ஜெர்ஸியை வெளியிட்டுள்ளது. மேலும், ஆஸ்திரேலிய அணியின் உலகக்கோப்பைக்கான ஜெர்ஸியை ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறது.
    இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வய்ப்பு இல்லை என சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி தொடங்கி ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட 10 அணிகள் பலப்ரீட்சை நடத்துகின்றன.

    இந்தியா - ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கு முன் இங்கிலாந்து அல்லது இந்தியா உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் பிரபலங்களால் கணிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா 2-3 என இழந்ததால் இந்தியாவின் மீதான பார்வை படிப்படியாக மங்க ஆரம்பித்துள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர், உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கே வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
    டெஸ்ட் போட்டியில் துணைக் கேப்டனாக இருக்கும் ரகானே, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடம் கிடைக்காதது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். #Rahane
    இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரகானே. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன இவர் ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

    தொடக்க பேட்ஸ்மேன் முதல் மிடில் வரிசையில் எந்த இடத்திலும் களம் இறங்கி விளையாட தயாராக இருக்கிறார். 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியை சந்தித்தது.

    இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தாலும், ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. அதன்பின் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடியது. இந்தத் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கிய ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதை பெற்றார்.

    ஆனால் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் அணிக்கு திரும்பிய பிறகு ரகானேவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அணியில் சேர்ப்பதும், நீக்குவதுமாக இருப்பதால் அவர் தொடர்ச்சியாக விளையாட முடியவில்லை. இதனால் அவரது ஆட்டத்திறன் குறைந்துள்ளது.

    தற்போது உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

    அணியில் இருந்து நீக்கப்பட்ட போதிலும் தேர்வுக்குழு குறித்து விமர்சனம் செய்தது கிடையாது. ஆனால் தற்போது தொடர்ச்சியாக வாய்ப்புகள் பெற நான் தகுதியானவன் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘தொடர்ச்சியாக அணிக்கு தேர்வு செய்யப்படாதது எனக்கு வெட்கமாக இருக்கிறது. நான் எனது பேட்டிங் மூலம் திறமையை நிரூபிக்க விரும்புகிறேன். ஆனால், சில சமயங்களில் உண்மைகளை சொல்வதும் முக்கியமானதாக இருக்கிறது.

    நான் எப்போதுமே அணிக்கு முன்னுரிமை கொடுத்து, அணியின் நிர்வாகம் மற்றும் தேர்வுக் குழுவினரின் முடிவில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அந்த நம்பிக்கை தொடரும். எனினும் எனது திறமை அங்கீகரிக்கப்பட வேண்டியதும் அவசியம்.

    ஒரு வீரராக நான் அணிக்காகவே விளையாடி இருக்கிறேன். அதனால் எனக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இது மட்டுமே எனது விருப்பம்’’ என்றார்.
    உலகக்கோப்பை மட்டுமே என்னை ஒரு மனிதராகவும், கிரிக்கெட்டராகவும் வரையறுக்காது என்று ‘360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். #ABDEVilliers
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். கடந்த ஆண்டு மே மாதம் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்தில் வரவிருக்கும் உலகக்கோப்பை வரை விளையாடும்படி தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்ட போதிலும், அவர் தனது முடிவில் இருந்து மாறவில்லை.

    சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் டி20 லீக்கில் விளையாடுவேன் என்று தெரிவித்தார். இதனால் வங்காள தேசம் பிரிமீயர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முதன்முறையாக விளையாடினார். ஐபிஎல் தொடர் முடிந்த உடன் இங்கிலாந்தில் நடைபெறும் டி20 பிளாஸ்ட் தொடரில் மிடில்செக்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    டி வில்லியர்ஸ் இல்லாமல் தென்ஆப்பிரிக்கா அணி திணறி வருகிறது. இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்றது. இதற்கு தென்ஆப்பிரிக்காவின் தோல்வியே முக்கிய காரணம்.

    இந்நிலையில் மீண்டும் அணிக்கு திரும்புவீர்களா? உலகக்கோப்பை வரை விளையாடியிருக்கலாமே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டி வில்லியர்ஸ் ‘‘உலகக்கோப்பை மட்டுமே என்னை கிரிக்கெட்டராக வரையறுக்காது’’ என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஏபி டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்புவீர்களா? என்பது பதில் அளிப்பதற்கான கடினமான கேள்வி. மீண்டும் அணிக்கு திரும்பினால், நண்பர்களுடன் இணைந்து உயர்ந்த லெவல் கிரிக்கெட்டை நாட்டிற்காக விளையாடலாம். இதை தவற விடுவது சற்று கடினமாக இருக்கிறது.

    ஆனால், ஏராளமான விஷங்களை நான் மிஸ் செய்யவில்லை. 90 சதவிகிதம் விஷயங்களை நான் மிஸ் செய்யவில்லை. சர்வதேச போட்டியில் இருந்து நீண்ட தூரம் சென்று விட்டேன். உலகக்கோப்பை என்னை ஒரு கிரிக்கெட்டராகவும், மனிதராகவும் வரையறுக்க முடியாது’’ என்றார்.
    உலகக்கோப்பையில் நாம் பாகிஸ்தானுக்கு இரண்டு புள்ளிகளை கொடுப்பதை தனிப்பட்ட முறையில் வெறுக்கிறேன் என சச்சின் தெண்டுல்கர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
    புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்த சம்பவத்தையொட்டி உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக்கூடாது என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

    முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களிடையே இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. பிசிசிஐ பாகிஸ்தான் அணிக்கே தடை விதிக்க வேண்டும் என்று ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க இருக்கிறது.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், பாகிஸ்தானுக்கு இரண்டு புள்ளிகள் கொடுப்பது வெறுக்கத்தக்கதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பையில் எப்போதுமே நாம்தான் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளோம். மீண்டும் ஒருமுறை அவர்களை வீழ்த்த வேண்டும். பாகிஸ்தானை எதிர்த்து விளையாடாமல் அவர்களுக்கு இரண்டு புள்ளிகள் வழங்கி உதவி செய்வதை நான் வெறுக்கிறேன்.

    என்னைப் பொறுத்த வரையில் இந்தியாதான் எனக்கு முதன்மையானது. ஆகவே, என்னுடைய நாடு என்ன முடிவு எடுக்கிறதோ, அதன்பின்னால் நான் இருப்பேன்’’ என்றார்.
    ×